மயிலாடுதுறை, ஜூலை 14 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் 9 ஆவது நாளான ஞாயிறன்று தொடர்ந்து போராட்டம் நடை பெற்றது.
ஏகோஜி மகாராஜபுரம், மேலத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்கள் பல ஆண்டு களாக குடியிருக்க இடம் கேட்டு அரசு துறை யிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இத னால் அதே பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 45 குடும்பங் களுக்கு பிரித்து தர வேண்டுமென்ற கோரிக் கையை முன்வைத்து அந்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தை ஜூலை அன்று முதல் தொடர்ந்து நடத்தி வரு கின்றனர்.
கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலா ளர்கள், உறுப்பினர்கள், கிளை செயலாளர் கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் 9 ஆவது நாளான ஞாயிறன்றும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதுவரை எந்தவொரு அரசு அதிகாரி களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வராமல் அலட்சியம் செய்வதால், மார்க்சி ஸ்ட் கட்சி தலைவர்கள் முன்னிலையில் இடத்தைப் பிரிந்து வழங்குவதற்கான அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.